ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்களின் இசையமைப்பாளரான கீரவாணி தற்போது தமிழில் 'சந்திரமுகி 2' படத்திற்கு இசையமைத்து வருகிறார். தமிழில் மரகதமணி என்ற பெயரில் “அழகன், நீ பாதி நான் பாதி, சிவந்த மலர், சேவகன், வானமே எல்லை, ஜாதி மல்லி, கொண்டாட்டம், பிரதாப், ஸ்டூடன்ட் நம்பர் 1” ஆகிய படங்களுக்கு இசையமைத்துளளார்.
ஒரு தமிழ் இயக்குனரின் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இசையமைக்கும் 'சந்திரமுகி 2' படம் பற்றிய அப்டேட் ஒன்றை நேற்று கொடுத்துள்ளார்.“சந்திரமுகி 2' திரைப்படத்தைப் பார்த்தேன். இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மரண பயத்தால் தூக்கமில்லாத இரவுகளை கழிக்கின்றனர். என் முயற்சியால் மனதைக் கவரும் காட்சிகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக இரவு பகலாக தூக்கமில்லாமல் உயிரைக் கொடுத்துள்ளேன். குரு கிரண், எனது நண்பர் வித்யாசாகர் ஆகியோருக்கு எனக்கு வாழ்த்து சொல்லுங்கள்,” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பி. வாசு இயக்கத்தில் 2004ல் கன்னடத்தில் வெளியான 'ஆப்தமித்ரா' திரைப்படம்தான் பின்னர் தமிழில் 2005ல் 'சந்திரமுகி' யாக வெளிவந்தது. 'ஆப்தமித்ரா' படத்திற்கு குருகிரண், 'சந்திரமுகி' படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தனர். அந்த இரண்டு படங்களின் வெற்றிக்கும் இசையமைப்பாளர்களது பாடல்களும், பின்னணி இசையும் முக்கிய காரணமாக அமைந்தது.