எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தெலுங்குத் திரையுலகில் சீனியர் நட்சத்திர தம்பதியர் டாக்டர் ராஜசேகர், ஜீவிதா. 'புதுமைப்பெண்' படத்தில் அறிமுகமான டாக்டர் ராஜசேகர், அந்தக் காலத்தில் வெளியான தெலுங்கு டப்பிங் படமான 'இதுதான்டா போலீஸ்' படம் மூலம் பெரிய வெற்றியைப் பெற்றார். தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அவரது மனைவியான ஜீவிதா, தமிழில் 'உறவைக் காத்த கிளி' படம் மூலம் அறிமுகமானார். தமிழில் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர், தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். ராஜசேகர், ஜீவிதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களது மகள்களான ஷிவானி, ஷிவாத்மிகா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வருகின்றனர்.
சிரஞ்சீவியின் மைத்துனரும், தயாரிப்பாளரும், அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் தொடர்ந்து அவதூறு வழக்கு ஒன்றில் ராஜசேகர், ஜீவிதா தம்பதியருக்கு நம்பள்ளி, 17வது கூடுதல் தலைமை மெட்ரோபலிட்டன் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஒரு ஆண்டு தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு சிரஞ்சீவி மீதும், சிரஞ்சீவி ரத்த வங்கி மீதும் ரத்தத்தை விற்பதாக சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததால் அவர்கள் மீது அல்லு அரவிந்த் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ராஜசேகர், ஜீவிதா ஆகியோர் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை கட்டிய அவர்களுக்கு ஜாமீனும் அளிக்கப்பட்டுள்ளது.