ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

தெலுங்குத் திரையுலகில் சீனியர் நட்சத்திர தம்பதியர் டாக்டர் ராஜசேகர், ஜீவிதா. 'புதுமைப்பெண்' படத்தில் அறிமுகமான டாக்டர் ராஜசேகர், அந்தக் காலத்தில் வெளியான தெலுங்கு டப்பிங் படமான 'இதுதான்டா போலீஸ்' படம் மூலம் பெரிய வெற்றியைப் பெற்றார். தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அவரது மனைவியான ஜீவிதா, தமிழில் 'உறவைக் காத்த கிளி' படம் மூலம் அறிமுகமானார். தமிழில் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர், தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். ராஜசேகர், ஜீவிதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களது மகள்களான ஷிவானி, ஷிவாத்மிகா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வருகின்றனர்.
சிரஞ்சீவியின் மைத்துனரும், தயாரிப்பாளரும், அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் தொடர்ந்து அவதூறு வழக்கு ஒன்றில் ராஜசேகர், ஜீவிதா தம்பதியருக்கு நம்பள்ளி, 17வது கூடுதல் தலைமை மெட்ரோபலிட்டன் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஒரு ஆண்டு தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு சிரஞ்சீவி மீதும், சிரஞ்சீவி ரத்த வங்கி மீதும் ரத்தத்தை விற்பதாக சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததால் அவர்கள் மீது அல்லு அரவிந்த் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ராஜசேகர், ஜீவிதா ஆகியோர் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை கட்டிய அவர்களுக்கு ஜாமீனும் அளிக்கப்பட்டுள்ளது.




