‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மீனாட்சி சவுத்ரி. பல் மருத்துவம் படித்தவர். மாடலிங் உலகில் அறிமுகமான இவர் 2018ம் ஆண்டு 'மிஸ் இந்தியா' போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் புகழ்பெற்றார். இதன் மூலம் 'இச்சட வாகனமுலு நிலுபரடு' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு 'கிலாடி' படத்தில் நடித்தார். தற்போது விஜய் ஆண்டனி நடித்துள்ள 'கொலை' படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் நடிக்கும் இப்படத்தை 'விடியும் முன்' படத்தை இயக்கிய பாலாஜி கே.குமார் இயக்கியுள்ளார். வரும் 21ம் தேதி படம் வெளிவருகிறது.
கொலை படத்தில் நடித்திருப்பது பற்றி மீனாட்சி சவுத்ரி கூறியதாவது: முதலில் இந்த கேரக்டரில் நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தமானார். திடீரென்று அவர் விலகியதால் என்னை ஒப்பந்தம் செய்தனர். நான் பல் மருத்துவம் படித்தேன். ஆனால், எந்த மருத்துமனையிலும் பணியாற்றவில்லை. மாடலிங், சினிமா என்று பிசியாகி விட்டேன். நயன்தாரா, திரிஷாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். நானும் அவர்களைப் போல் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிப்பேன். தமிழில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடிக்க விரும்புகிறேன். தற்போது தீவிரமாக தமிழ் கற்று வருகிறேன். தற்போது 'குண்டூர் காரம்' என்ற தெலுங்கு படத்தில் மகேஷ் பாபுவுடன் நடித்து வருகிறேன். என்றார்.




