7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவிகள் மதுபானங்களை குடிக்கும் அதிர்ச்சி செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகி வருவது தான். இந்த நிலையில் இரண்டு இளம் பெண்கள் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கும் வீடியோ ஒன்றை நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ளார்.
அதோடு,
தண்ணியடி, பெண்ணே தண்ணியடி!
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று தண்ணியடி.
அப்ப பெண்கள் உரிமை தொகை சிந்தாம சிதறாமல் திரும்பிவிடும் என்று பதிவிட்டு உள்ளார்.
இதையடுத்து கஸ்தூரி வெளியிட்ட இன்னொரு பதிவில், தவறான பாதையில் போகும் சில பெண்களை பற்றிய பதிவே இது. அவர்களது பணம் பற்றியே கூறியுள்ளேன். மதுக்கடையில் பெண்கள் நிற்கும் நிலையை யாரும் கண்டிக்க மாட்டீர்கள். அது யாருக்கு என்றாலும், பெண்களின் உரிமை பணம் ஆண்களின் தவறான செயல்களுக்கு பலியாகக்கூடாது என்றும் பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.
அவரது இந்த பதிவுகளுக்கு வழக்கம் போல் சோசியல் மீடியாவில் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு விதமான கமெண்டுகளும் வெளியாகி வருகிறது.