மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவிகள் மதுபானங்களை குடிக்கும் அதிர்ச்சி செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகி வருவது தான். இந்த நிலையில் இரண்டு இளம் பெண்கள் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கும் வீடியோ ஒன்றை நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ளார்.
அதோடு,
தண்ணியடி, பெண்ணே தண்ணியடி!
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று தண்ணியடி.
அப்ப பெண்கள் உரிமை தொகை சிந்தாம சிதறாமல் திரும்பிவிடும் என்று பதிவிட்டு உள்ளார்.
இதையடுத்து கஸ்தூரி வெளியிட்ட இன்னொரு பதிவில், தவறான பாதையில் போகும் சில பெண்களை பற்றிய பதிவே இது. அவர்களது பணம் பற்றியே கூறியுள்ளேன். மதுக்கடையில் பெண்கள் நிற்கும் நிலையை யாரும் கண்டிக்க மாட்டீர்கள். அது யாருக்கு என்றாலும், பெண்களின் உரிமை பணம் ஆண்களின் தவறான செயல்களுக்கு பலியாகக்கூடாது என்றும் பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.
அவரது இந்த பதிவுகளுக்கு வழக்கம் போல் சோசியல் மீடியாவில் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு விதமான கமெண்டுகளும் வெளியாகி வருகிறது.