‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

பரத் நடித்திருக்கும் 50வது படம் 'லவ்'. இந்த படத்தில் பரத் ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார், மலையாள இயக்குனர் ஆர்.டி.பாலா இயக்கி உள்ளார். படம் வருகிற 28ம் தேதி வெளிவருகிறது. படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட வாணி போஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவிக்குள் வரும் சண்டை சச்சரவுகளை மையமாக கொண்டு இந்த படம் தயாராகி உள்ளது. அதற்குள் ஒரு சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லர் சமாச்சாரம் இருக்கிறது. நான் கணவனை எதிர்த்து கேள்வி கேட்கும் துணிச்சலான மனைவியாக நடித்திருக்கிறேன். பரத்துடன் இதற்கு முன் 'மிரள்' படத்தில் நடித்தேன். இது இரண்டாவது படம். அடுத்து ராதா மோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன். இதில் யோகிபாபு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அதர்வாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். பல வருடங்களுக்கு பிறகு தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்கிறேன். நான் நடித்து முடித்துள்ள பல படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.
என்னை போன்றே சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். அவர் உங்களுக்கு போட்டியா என்று பலரும் கேட்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. அவர் நிறைய படங்களில் நடிக்கிறார். பெரிய ஹீரோக்களுடன் நடிக்கிறார். ஒரு தோழி என்கிற நிலையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு வாழ்த்து சொல்கிறேன். இதில் போட்டியோ பொறாமையோ எதுவும் இல்லை. அவர் வழியில் அவர் செல்கிறார். என் வழியில் நான் செல்கிறேன். இருவரை பற்றிய ஒப்பீடே தேவையில்லாத ஒன்று.
எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் இவ்வளவு தூரம் நான் கடந்து வந்திருப்பதே பெரிய சாதனைதான். தொடர்ந்து படங்களை கவனமாக தேர்வு செய்து நடிப்பேன். இதுவரை கடந்து வந்த பாதையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நிறைவாக இருக்கிறேன்.
இவ்வாறு வாணி போஜன் கூறினார்.




