மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பரத் நடித்திருக்கும் 50வது படம் 'லவ்'. இந்த படத்தில் பரத் ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார், மலையாள இயக்குனர் ஆர்.டி.பாலா இயக்கி உள்ளார். படம் வருகிற 28ம் தேதி வெளிவருகிறது. படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட வாணி போஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவிக்குள் வரும் சண்டை சச்சரவுகளை மையமாக கொண்டு இந்த படம் தயாராகி உள்ளது. அதற்குள் ஒரு சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லர் சமாச்சாரம் இருக்கிறது. நான் கணவனை எதிர்த்து கேள்வி கேட்கும் துணிச்சலான மனைவியாக நடித்திருக்கிறேன். பரத்துடன் இதற்கு முன் 'மிரள்' படத்தில் நடித்தேன். இது இரண்டாவது படம். அடுத்து ராதா மோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன். இதில் யோகிபாபு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அதர்வாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். பல வருடங்களுக்கு பிறகு தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்கிறேன். நான் நடித்து முடித்துள்ள பல படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.
என்னை போன்றே சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். அவர் உங்களுக்கு போட்டியா என்று பலரும் கேட்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. அவர் நிறைய படங்களில் நடிக்கிறார். பெரிய ஹீரோக்களுடன் நடிக்கிறார். ஒரு தோழி என்கிற நிலையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு வாழ்த்து சொல்கிறேன். இதில் போட்டியோ பொறாமையோ எதுவும் இல்லை. அவர் வழியில் அவர் செல்கிறார். என் வழியில் நான் செல்கிறேன். இருவரை பற்றிய ஒப்பீடே தேவையில்லாத ஒன்று.
எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் இவ்வளவு தூரம் நான் கடந்து வந்திருப்பதே பெரிய சாதனைதான். தொடர்ந்து படங்களை கவனமாக தேர்வு செய்து நடிப்பேன். இதுவரை கடந்து வந்த பாதையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நிறைவாக இருக்கிறேன்.
இவ்வாறு வாணி போஜன் கூறினார்.