மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ரேனிகுண்டா, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை சனுஷா சந்தோஷ். குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் கதாநாயகியாக நடிக்க தொடங்கிய இவருக்கு 2016 வரை ஓரளவு கதாநாயகி மற்றும் தங்கை கதாபாத்திரங்கள் வந்து கொண்டிருந்தன. தமிழில் 2017ல் வெளியான கொடிவீரன் படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்தார் சனுஷா.
அதே சமயம் மலையாளத்தில் 2016ல் தான் கடைசியாக இவர் நடித்த படம் வெளியானது. இந்த நிலையில் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார் சனுஷா. தற்போது ஒரே சமயத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அதில் ஊர்வசியுடன் இவர் இணைந்து நடித்துள்ள 'ஜலதார பம்பு செட் சின்ஸ் 1962' என்கிற படம் விரைவில் வெளியாக உள்ளது.
மீண்டும் ஒரு இடைவெளிக்குப் பிறகு மலையாள திரையுலகத்திற்கு திரும்பி உள்ளது குறித்து சனுஷா கூறும்போது, “மலையாள திரையுலகை கடந்த ஆறு வருடங்களாக ரொம்பவே மிஸ் பண்ணினேன். அதே சமயம் ஒரு நல்ல படத்தின் மூலம் மீண்டும் திரும்பி வருகிறேன். அதிலும் இந்த படத்தில் ஊர்வசியுடன் இணைந்து நடித்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்” என்று கூறியுள்ளார் சனுஷா.