அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்து வருபவர் சாய் பல்லவி. நிறைய படங்களில் நடிக்காமல் மிகவும் தேர்வு செய்து மட்டுமே நடித்து வருகிறார். கதாநாயகியாக அறிமுகமான இந்த எட்டு வருடங்களில் தமிழில் இதுவரையில், “தியா, மாரி 2, என்ஜிகே, கார்கி” என நான்கே படங்களில்தான் நடித்துள்ளார்.
இந்த வருடத்தில் சாய் பல்லவி நடித்து இதுவரையில் எந்த மொழியிலும் ஒரு படம் கூட வெளியாகவில்லை. தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. ஒரு ராணுவ வீரரின் தியாகக் கதைதான் இந்தப் படம் என்று சொல்லப்படுகிறது.
காஷ்மீரில் எடுத்த சில புகைப்படங்களைப் பகிர்ந்து “மனநிலை - அமைதி” என மட்டும் குறிப்பிட்டுள்ளார் சாய் பல்லவி.