பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் கவர்ச்சியால் கலக்கியவர் 'மச்சான்ஸ்' நடிகை நமீதா. ஒரு கட்டத்தில் அவரது உடல் எடை அதிகரிக்கவே, பட வாய்ப்புகள் குறைந்தது. அதையடுத்து வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். இவர்களுக்கு கடந்த வருடம் இரட்டை குழந்தைகள் பிறந்தனர். கிருஷ்ண ஆதித்யன் மற்றும் கியான் ராஜ் என்கிற இந்த இரண்டு குழந்தைகளுக்கும் தற்போது ஒரு வயது நிறைவடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கேரளாவில் உள்ள அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணசாமி கோவிலுக்கு கணவர் மற்றும் குழந்தைகளுடன் வந்து பிரார்த்தனை செய்துள்ளார் நமீதா. இதுகுறித்து அவர் கூறும் போது, “இந்த குழந்தைகள் இருவரும் பிறந்த பின்னர் தான் எங்களது வாழ்க்கையில் அதிசயங்களும் அற்புதங்களும் நடக்க ஆரம்பித்தன. ஹேப்பி பர்த்டே டு மை ட்வின்ஸ்.. இதயத்தில் இருந்தும்.. இதயத்துடிப்பில் இருந்தும்..” என்று கூறியுள்ளார்.