எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர் கட்டணங்களை உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில், “கடந்த 16 அக்டோபர் 2017 அன்று தமிழக அரசாணை மூலம் எங்களுக்கு கட்டண விகிதிம் நிர்ணயித்து ஆணையிட்டது. 6 ஆண்டுகள் கடந்து விட்டதாலும் நடை முறை செலவுகள் அதிகரித்து விட்டதாலும் திரையரங்குகள் நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே திரையரங்க உரிமையாளர்களை காப்பாற்ற கீழ்க்கண்டவாறு கட்டணங்களை உயர்த்தி வழங்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்,” என தெரிவித்துள்ளனர். அவர்கள் கோரிக்கை வைத்துள்ள கட்டணங்கள் விவரம்…
* மல்டிபிளக்ஸ் -- ஏசி தியேட்டர் ரூ.250, நான் ஏசி ரூ.150
* மாநகரம், நகரம், டவுன் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து - ஏசி தியேட்டர் ரூ.200, நான் ஏசி ரூ.120
* ஐமாக்ஸ் - ரூ.450
* எபிக் - ரூ. 400
* சாய்வு இருக்கை தியேட்டர்கள் - ரூ.350