டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 'பாட்னர்'. இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். ராயல் பார்ச்சூனா கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்திருக்கிறார்.
படத்தின் கதை சற்று வித்தியாசமானது. ஆதியும், யோகி பாபுவும் நெருக்கமான நண்பர்கள், ஆதி பலக் லால்வானியை காதலித்து வருகிறார். இந்த நிலையில் ஆராய்ச்சியாளரான பாண்டியராஜனை ஒரு வேலையாக ஆதியும், யோகி பாபுவும் சந்திக்கிறார்கள். அவரது லேபில் நடக்கும் ஒரு கோளாறால் திடீரென யோகிபாபு பெண்ணாக மாறிவிடுகிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை. இந்த கதையில் யோகிபாபு மாறிய பெண்ணாக நடித்திருக்கிறார் ஹன்சிகா.
இதுகுறித்து ஹன்சிகா கூறியதாவது: இப்படி ஒரு கேரக்டரில் இதற்கு முன் யாராவது நடித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. நிறைய ஹீரோக்கள் பெண்ணாக நடித்திருக்கிறார்கள் ஹீரோயினரானால் ஆணாக நடித்திருக்கிறேன் ஆணாக வேஷம் போடவில்லை என்றாலும், ஆண்களின் மேனரிஷம் டயலாக் டெலிவரி ஆகியவற்றை முயற்சி செய்திருக்கிறேன்.
யோகி பாபுவின் நடை உடை பாவனைகளை கண்காணித்து அதேபோலவே நடிக்க முயற்சித்து இருக்கிறேன் இந்த படத்தில் லாஜிக் பார்க்க வேண்டாம். இரண்டரை மணி நேரம் ரசிகர்களை சிரிக்க வைக்கும் முயற்சியாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆணாகப் பிறந்தால் என்னவாக ஆகியிருப்பீர்கள் என்று கேட்கிறார்கள். நான் பெண்ணாக பிறந்ததிலேயே பெருமை கொள்கிறேன். அடுத்த ஜென்மத்தில் கடவுள் ஆணாக படைத்தால் மகிழ்ச்சி.
திருமணத்திற்கு பிறகு அதிக படங்களில் நடித்து வருகிறேன். என்னை பொறுத்தவரை நடிப்பில் திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என்ற வித்தியாசம் இல்லை. எனது கணவர் முழு சுதந்திரம் தந்திருக்கிறார். அதனால் தொடர்ந்து நடிக்கிறேன். இனி என்னை அடிக்கடி தமிழ் படங்களில் பார்க்கலாம். என்றார்.




