Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யோகிபாபுவாக நடித்தது எப்படி?: ஹன்சிகா விளக்கம்

03 ஜூலை, 2023 - 01:28 IST
எழுத்தின் அளவு:
How-did-playing-Yogibabu-come-about?:-Hansika-explains

அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 'பாட்னர்'. இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். ராயல் பார்ச்சூனா கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்திருக்கிறார்.

படத்தின் கதை சற்று வித்தியாசமானது. ஆதியும், யோகி பாபுவும் நெருக்கமான நண்பர்கள், ஆதி பலக் லால்வானியை காதலித்து வருகிறார். இந்த நிலையில் ஆராய்ச்சியாளரான பாண்டியராஜனை ஒரு வேலையாக ஆதியும், யோகி பாபுவும் சந்திக்கிறார்கள். அவரது லேபில் நடக்கும் ஒரு கோளாறால் திடீரென யோகிபாபு பெண்ணாக மாறிவிடுகிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை. இந்த கதையில் யோகிபாபு மாறிய பெண்ணாக நடித்திருக்கிறார் ஹன்சிகா.

இதுகுறித்து ஹன்சிகா கூறியதாவது: இப்படி ஒரு கேரக்டரில் இதற்கு முன் யாராவது நடித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. நிறைய ஹீரோக்கள் பெண்ணாக நடித்திருக்கிறார்கள் ஹீரோயினரானால் ஆணாக நடித்திருக்கிறேன் ஆணாக வேஷம் போடவில்லை என்றாலும், ஆண்களின் மேனரிஷம் டயலாக் டெலிவரி ஆகியவற்றை முயற்சி செய்திருக்கிறேன்.

யோகி பாபுவின் நடை உடை பாவனைகளை கண்காணித்து அதேபோலவே நடிக்க முயற்சித்து இருக்கிறேன் இந்த படத்தில் லாஜிக் பார்க்க வேண்டாம். இரண்டரை மணி நேரம் ரசிகர்களை சிரிக்க வைக்கும் முயற்சியாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆணாகப் பிறந்தால் என்னவாக ஆகியிருப்பீர்கள் என்று கேட்கிறார்கள். நான் பெண்ணாக பிறந்ததிலேயே பெருமை கொள்கிறேன். அடுத்த ஜென்மத்தில் கடவுள் ஆணாக படைத்தால் மகிழ்ச்சி.

திருமணத்திற்கு பிறகு அதிக படங்களில் நடித்து வருகிறேன். என்னை பொறுத்தவரை நடிப்பில் திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என்ற வித்தியாசம் இல்லை. எனது கணவர் முழு சுதந்திரம் தந்திருக்கிறார். அதனால் தொடர்ந்து நடிக்கிறேன். இனி என்னை அடிக்கடி தமிழ் படங்களில் பார்க்கலாம். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்'  இயக்குனருக்கும் இங்கிலாந்து மன்னர் விருது'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ... ரஜினிகாந்த் இடத்திற்கு ஆசைப்படுகிறாரா சிவகார்த்திகேயன்? ரஜினிகாந்த் இடத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)