புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
காமெடியனாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பிரேம்ஜி அமரன். அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் படம் அனைத்திலும் அவர் நடித்துள்ளார். :மாங்கா' என்ற படத்தில் கதை நாயகனாக நடித்திருந்தார். தற்போது அவர் மீண்டும் கதை நாயகனாக நடித்துள்ள படம் 'சத்திய சோதனை'. இந்த படத்தை' ஒரு கிடாயின் கருணை மனு' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சுரேஷ் சங்கையா இயக்கி உள்ளார். ஸ்வயம் சித்தா, ரேஷ்மா, கு.ஞானசம்பந்தம், 'சித்தன்' மோகன் உட்பட பலர் நடித்துள்ளனர். படம் வருகிற 14ம்தேதி வெளியாகிறது.
படம் பற்றி சுரேஷ் சங்கய்யா கூறியதாவது: இது அருப்புக்கோட்டை பின்னணியில் நடக்கும் கதை. சிறு நகரங்களில் காவல் நிலையம், நீதிமன்றம் எப்படி இயங்குகிறது என்பதை இந்தப் படம் சொல்லும். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை படங்களில் பார்த்த பிரேம்ஜி இதில் தெரியமாட்டார். அவர் ஸ்டைலும் இருக்காது. வித்தியாசமான பிரேம்ஜியை இதில் பார்க்கலாம். பார்வையாளர்கள் கதையோடு தங்களைத் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும். என்றார்.