அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் |

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சுனில், சரிதா,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் மாவீரன். இசையமைப்பாளர் பரத் ஷங்கர் இசையமைக்கும் இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள் ரசிகர்களை திருப்தி செய்யவில்லை. இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு சென்னையில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மாவீரன் படத்தில் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் ஒளிந்து உள்ளதாக பரவி வந்தது. தற்போது அந்த சர்ப்ரைஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் சிவகார்த்திகேயன் காதில் மட்டும் ஒரு குரல் அடிக்கடி ஒலிக்குமாம். அந்த குரலை கொடுப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதியை முதலில் அணுகியுள்ளனர். அதன்பின் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து அந்த குரல் கொடுக்க பேச்சு வார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இறுதியாக யார் அந்த குரல் கொடுத்தது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால், இன்று வெளியாகும் மாவீரன் டிரைலரில் அந்த மர்ம குரல் யார் என்று தெரிய வரும் என்கிறார்கள்.