துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
விஜய், சூர்யா, ரஜினிகாந்த் என முன்னணி ஹீரோக்களை வைத்து தொடர்ந்து படம் இயக்கி பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் கடைசியாக இவர் விஜய்யை வைத்து இயக்கிய சர்க்கார், ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய தர்பார் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறின. இதனால் தர்பார் படம் வெளியாகியும் கூட ஏ.ஆர்.முருகதாஸ், தனது அடுத்த படத்தை துவங்குவதற்கு கிட்டத்தட்ட மூன்று வருட இடைவெளி விழுந்து விட்டது.
இடையில் நடிகர் விஜய்க்கு கதைசொல்லி அது அவருக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஏ.ஆர் முருகதாஸிற்கு கைகொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். அந்தவகையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார் ஏ.ஆர் முருகதாஸ். இந்த படத்தில் கதாநாயகியாக சீதா ராமம் புகழ் மிருணாள் தாக்கூர் நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் கதைக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்றாலும் எதற்கும் ஒரு ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்து பார்த்து விடுவோம் என முடிவெடுத்துள்ளாராம் ஏ.ஆர் முருகதாஸ். சில நாட்களில் இந்த ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.