ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ள மாமன்னன் படம் தற்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், நான் சிறு வயதில் இருந்தே விஜய்யின் தீவிரமான ரசிகராக இருந்தேன். பள்ளியில் படித்த காலங்களில் அவருக்கு ரசிகர் மன்றம் கூட வைத்தேன். அதனால் இயக்குனர் ஆனதில் இருந்தே விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வருகிறது. அதன் காரணமாக விஜய்யை ஒருமுறை சந்தித்தபோது அவரிடத்தில் ஒரு கதை சொன்னேன். அதைக் கேட்டு அவர் ஷாக் ஆகிவிட்டார். என்றாலும் விரைவில் விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்று அவருக்காக கதை தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்த படம் சமூகம் சார்ந்த சமூகத்திற்கு தேவையான ஒரு கதையில் உருவாகும் என்கிறார் மாரி செல்வராஜ்.