டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

2006ம் ஆண்டு போட்டோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான அஞ்சலி தமிழில் கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சிங்கம் 2, இறைவி உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் நடித்தார். அறிமுகமாகி 19 ஆண்டுகளில் 49 படங்களில் நடித்துள்ளார். அவரின் 50வது படம் ஈகை.
இந்த படத்தில் அவர் சோலோ ஹீரோயினாக நடிக்கிறார். அவருடன் பாரதிராஜா , புஷ்பா பட வில்லன் சுனில், இளவரசு, புகழ், அறிமுக நடிகர் ஹரி, அபி நட்சத்திரா, நிஷாந்த் ரகு, கிருஷ்ண சந்தர், காஷ்யப் பார்பயா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். தரண் குமார் இசை அமைக்கிறார், ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் துவக்கவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சங்கத்தலைவர் முரளி ராமசாமி கலந்து கொண்டனர்.
படம் பற்றி இயக்குனர் அசோக் வேலாயுதம் கூறியதாவது: சஸ்பென்ஸ் நிறந்த சமூக கருத்துள்ள படமாக உருவாகிறது. ஈகைக்குணம் குறைந்த இன்றைய நாட்களில் சமூகத்தில் நிலவும் வன்முறைகளும், மனிதாபிமானமற்ற வாழ்வியலும் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில் அறம் நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு இந்த படம். தமிழ் , தெலுங்கு, கன்னடம் , மலையாளம் , இந்தி ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப்படம் சென்னை, மற்றும் ஐதராபாத், மும்பையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. என்றார்.




