சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு |

கோவை மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஜோசப் பேபி என்பவர் தமிழக அரசியலில் நேர்மையாக வாழ்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து, அதில் அவர் கக்கனாக நடித்தும் இருக்கிறார். அவரே திரைக்கதை, வசனத்தையும் எழதியிருக்கிறார். ஏ.எஸ்.சந்தோஷ்ராமா இயக்கி உள்ளார். தேவா இசை அமைத்துள்ளார்.
இதுகுறித்து ஜோசப் பேபி கூறியதாவது : கக்கன் மீது மாறாத பற்று கொண்டவன் நான். அவரது வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்பதாற்காக கடந்த 30 வருடங்களாக பணம் சேர்த்து வந்தேன். பிரபல நடிகர்கள் நடித்தால் அவர்கள் முகம்தான் தெரியும், கக்கன் பின்னனுக்கு தள்ளப்படுவார் என்பதால் நானே கக்ககான நடித்தேன். எல்லா பணிகளையும் நானே செய்ய முடியாது என்பதால் இயக்கும் பொறுப்பை இன்னொருவருக்கு கொடுத்தேன்.
இன்றைய தலைமுறையினருக்கு கக்கன் பற்றித் தெரியாது. இந்த படத்திற்கு பிறகு அவரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வார்கள். அரசியலுக்கு வரும் ஆசை ஏற்பட்டால் அவரையே முன்மாதிரியாக கொள்வார்கள். படத்தை விரைவில் வெளியிட இருக்கிறேன். இதில் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை கக்கன் குடும்பத்திற்கு வழங்க இருக்கிறேன். என்றார்.




