உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா | 'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு | டிரைலருக்கு 'குட்' வரவேற்பு; படத்திற்கும் அப்படியே கிடைக்குமா? | ஒருங்கிணைந்து செயல்படுவோம் : தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு | அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள், ஆனாலும்…. |
கோவை மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஜோசப் பேபி என்பவர் தமிழக அரசியலில் நேர்மையாக வாழ்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து, அதில் அவர் கக்கனாக நடித்தும் இருக்கிறார். அவரே திரைக்கதை, வசனத்தையும் எழதியிருக்கிறார். ஏ.எஸ்.சந்தோஷ்ராமா இயக்கி உள்ளார். தேவா இசை அமைத்துள்ளார்.
இதுகுறித்து ஜோசப் பேபி கூறியதாவது : கக்கன் மீது மாறாத பற்று கொண்டவன் நான். அவரது வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்பதாற்காக கடந்த 30 வருடங்களாக பணம் சேர்த்து வந்தேன். பிரபல நடிகர்கள் நடித்தால் அவர்கள் முகம்தான் தெரியும், கக்கன் பின்னனுக்கு தள்ளப்படுவார் என்பதால் நானே கக்ககான நடித்தேன். எல்லா பணிகளையும் நானே செய்ய முடியாது என்பதால் இயக்கும் பொறுப்பை இன்னொருவருக்கு கொடுத்தேன்.
இன்றைய தலைமுறையினருக்கு கக்கன் பற்றித் தெரியாது. இந்த படத்திற்கு பிறகு அவரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வார்கள். அரசியலுக்கு வரும் ஆசை ஏற்பட்டால் அவரையே முன்மாதிரியாக கொள்வார்கள். படத்தை விரைவில் வெளியிட இருக்கிறேன். இதில் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை கக்கன் குடும்பத்திற்கு வழங்க இருக்கிறேன். என்றார்.