இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சமீபத்தில் கடந்து சென்ற தந்தையர் தினத்தை கொண்டாடும் விதமாக திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களது தந்தையுடனான அனுபவங்கள் அவர்களைப் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டதை பார்க்க முடிந்தது. அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது தந்தையும் தயாரிப்பாளருமான சுரேஷ் குமாருடன் தான் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் அவரது தந்தையின் மடியில் சிறு குழந்தையாக கீர்த்தி சுரேஷ் இருப்பது போலவும் பார்ப்பதற்கு அந்த நிகழ்வு அவருக்கு பெயர் சூட்டு விழா போலவும் தெரிந்தது.
இந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் இதேபோன்ற ஒரு நிகழ்வை இப்போது மீண்டும் மறு உருவாக்கம் செய்ய விரும்பியதாக, அதாவது தனது தந்தையின் மடியில் படுத்துக்கொண்டு ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பியதாகவும் ஆனால் இப்போது அது சாத்தியமில்லை என தனது தந்தை மறுத்துவிட்டதாகவும் அதில் கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த பதிவு ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது.