இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப்அலிகான் மற்றும் பலர் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் 'ஆதிபுருஷ்'. ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் என்றுதான் இப்படத்தைப் பற்றி அனைவரும் பேசினார்கள், எழுதினார்கள். ஆனால், படத்தைப் பார்த்த பின் சில பல சர்ச்சை எழுந்ததால் இது குறித்து படத்தின் எழுத்தாளர் மனோஜ் முன்தஷிர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.
“படத்தின் பெயர் 'ஆதிபுருஷ்'. நான் முன்பும் சொன்னேன், இப்போது மீண்டும் சொல்கிறேன், நாங்கள் ராமாயணத்தை எடுக்கவில்லை. இதைப் படமாக்க அது எங்களைத் தூண்டியுள்ளது. படத்தின் ஆரம்பத்தில் 'பொறுப்பு துறப்பு' என்று இதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளோம். இப்படத்திற்கு 'ஆதிபுருஷ்' என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக 'ராமாயண்' எனப் பெயர் வைத்திருந்தால் எங்களுக்கு மார்க்கெட்டிங் செய்வதற்கும் சுலபமாக இருந்திருக்கும். ராமாயணத்தின் 'யுத்த காண்டம்' பகுதியை மட்டும் படத்தில் சித்தரித்துள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.
மனோஜின் இந்த பேட்டியும், கருத்தும் மீண்டும் ஒரு வாதத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.