சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் | சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | 4 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடித்த கவுரி கிஷன் | பிளாஷ்பேக் : புறக்கணித்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்த ஏவிஎம் | காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி | மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி |

தக் லைப் படத்திற்கு பின் நடிகர் கமல்ஹாசன் அடுத்து சண்டை இயக்குனர்கள் அன்பு அறிவு இயக்கத்தில் நடிக்கிறார். இது அவரது 237வது படமாக உருவாகிறது. இதனை ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். பல மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் ஏதோ காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த படம் கைவிடப்பட்டது எனவும் தகவல்கள் பரவியது. தற்போது இந்த படத்தில் பிரபல மலையாள கதை எழுத்தாளர் ஷியாம் புஷ்கரன் இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர். இவர் மலையாளத்தில் கும்பலாங்கி நைட்ஸ், மகிஷிண்டே பிரதிகாரம் உள்ளிட்ட படங்களில் கதை எழுத்தாளர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            