இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர், நிறைய காதலிப்பார் திடீரென எல்லாவற்றையும் ரத்து செய்வார். முதல் நாள் காதலனுடன் படு நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிடுவார். மறுநாள் காதலன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீசில் புகார் அளிப்பார்.
கடந்த 2006ம் ஆண்டு மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பாடகர் மிகா சிங் தனது பிறந்த நாளை பார்ட்டி வைத்து கொண்டாடினார். இந்த விழாவில் ராக்கி சாவந்த் கலந்து கொண்டார். பார்ட்டி உச்சத்தில் இருக்கும் போது பாடகர் மிகா சிங், ராக்கி சாவந்தை இழுத்து பிடித்து ஒரு உம்மா கொடுத்துவிட்டார். இது தொடர்பாக ராக்கி சாவந்த் போலீசில் புகார் செய்தார். புகாரை பதிவு செய்து போலீசார் மிகா சிங் மீது வழக்கு தொடர்ந்தனர். 7 ஆண்டுகளாக மும்பை நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
பாடகர் மிகா சிங்கும், நடிகை ராக்கி சாவந்தும் நாங்கள் முத்த பிரச்சினையை எங்களுக்குள் பேசி முடித்து சமாதானமாகி விட்டோம். அதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டது.