பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

“சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு” ஆகிய படங்களை இயக்கிய எச் வினோத் அடுத்து கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாக கடந்த சில பல மாதங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருந்தன. 'இந்தியன் 2' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் கமல், அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ள கமல்ஹாசனின் 234வது படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. அதனால், வினோத் இயக்கும் படத்தில் கமல் நடிக்கிறாரா இல்லையா என்ற குழப்பம் நிலவியது.

இதனிடையே நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய விவசாயிகளை கமல்ஹாசன், எச் வினோத் நேற்று கமல்ஹாசனின் சென்னை, ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்தனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் ஜுன் 17, 18 தேதிகளில் 2023ம் ஆண்டிற்கான தேசிய நெல் திருவிழாவில் கலந்து கொள்ள கமல்ஹாசனை விவசாயிகள் அழைத்துள்ளனர். அப்போது அவர்களிடம் பேசிய கமல்ஹாசன் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க விவசாயிகளுக்கு எப்போதும் துணையாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன், எச் வினோத் இந்த சந்திப்பில் சேர்ந்து கலந்து கொண்டதால் இருவரும் இணைய உள்ள கமல்ஹாசனின் 233வது படம் விவசாயம் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பதற்கு முன்பு குறுகிய காலத் தயாரிப்பாக இப்படம் இருக்கலாம் என்கிறார்கள்.