ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
ராதாமோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர், சாந்தினி மற்றும் பலர் நடித்துள்ள 'பொம்மை' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. 'மான்ஸ்டர்' படத்திற்குப் பிறகு மீண்டும் பிரியா பவானியுடன் ஜோடி சேர்ந்து நடித்த காரணம் என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரியா பவானியை சிம்ரனுடன் ஒப்பிட்டுப் பேசினார் எஸ்ஜே சூர்யா.
“எங்க அக்கா பொண்ணுக்கு கிட்டத்தட்ட பிரியா பவானி சங்கரோட சாயல் இருக்கும். சிம்ரன் மேடம் பார்த்தீங்கன்னா, அந்த பேஸ் கட் இருக்கும், த்ரிஷாவுக்கு இருக்கும். முகத்துல ஒரு கட் இருக்கும், அந்த கட் இருந்ததுன்னா ஒரு முகத்துக்கும் இன்னொரு முகத்துக்கும் பொருத்தமா இருக்கும். ஷாரூக்கானுக்கும் கஜோலுக்கும் அப்படி இருக்கும். அதுக்கு என்ன காரணம்னு சொல்ல முடியாது. எனக்கும் பிரியாவுக்கும் ஒரு மேத்தமேடிக்கல் பியூச்சர்ஸ் செட் ஆகுது. அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.
“தொட்டால் பூ மலரும்” பாட்டுல நானும் சிம்ரனும் இருந்த ஸ்டில்லையும், 'பொம்மை' படத்துல நானும், பிரியாவும் இருந்த ஸ்டில்லையும் இதுக்கு முன்னாடி ஒண்ணா போட்டிருந்தேன். சிம்ரன் மாதிரியே பிரியா இருந்தாங்க. 'மான்ஸ்டர்' படத்தோட வெற்றி, நல்லாவும் நடிச்சாங்க. அதான் இந்தப் படத்துல மீண்டும் ஜோடியா நடிச்சிருக்காங்க,” என்றார் எஸ்ஜே சூர்யா.
சிம்ரன் போல பிரியா பவானி இருக்கிறார் என்ற எஸ்ஜே சூர்யாவின் பேச்சுக்கு நிறையவே வெட்கப்பட்டு பக்கத்தில் இருந்த இயக்குனர் ராதாமோகனிடம் என்னவோ கிசுகிசுத்தார் பிரியா.