ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
நடிகர் ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணா. ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ரஜினியை விட அதிகம் பேசி வந்தவர் இவர். ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த பிறகு அரசியல் வேண்டாம் என்று தடுத்தவரும் இவர்தான். இதை தொடர்ந்து ரஜினி மருத்துவர்களின் ஆலோசனைப்படியும், நலம் விரும்பிகளின் வேண்டுகோள்படியும் நான் அரசியலுக்கு வரவில்லை என்று முறைப்படி அறிவித்து விட்டார்.
என்றாலும் ரஜினி மனம் மாறி என்றாவது மீண்டும் அரசியலுக்கு வரலாம் என்று அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ரஜினி இனி அரசியலுக்கு வந்தாலும் பலன் இல்லை என்று அவரது அண்ணன் சத்ய நாராயணன் கூறியிருக்கிறார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்த அவர் வழிபாடு முடிந்து திரும்பியதும் நிருபர்களிடையே பேசினார். அப்போது ரஜினி அரசியலுக்கு வரும் வாய்ப்பு குறித்து கேட்டபோது “ரஜினியின் ஜெயிலர், லால் சலாம் திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. கடவுளின் அருளால் அவர் நீண்ட காலம் நலமாக இருக்க வேண்டும். ரஜினி இனி அரசியலுக்கு வரமாட்டார். அவருக்கு வயதாகிவிட்டது. அவர் இனி அரசியலுக்கு வந்தாலும் பிரயோஜனம் இல்லை. யாருக்கும் ஆதரவு அளிக்கவும் வாய்ப்பில்லை" என்றார்.