ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரின் 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார் என்று அறிவித்தனர். சினிமா அல்லாமல் விரைவில் அரசியலில் இறங்குகிறார் விஜய். கடந்த சில மாதங்களாக தன் ரசிகர்களின் மூலமாக அம்பேத்கர் போன்ற முக்கிய தலைவர்களுக்கு அவர்கள் பிறந்தநாள் அன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்படி அறிவுறித்தினார்.
இந்நிலையில் அடுத்தப்படியாக மாணவர்களை சந்திக்க உள்ளார். சமீபத்தில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளை நேரில் சந்திக்கிறார் விஜய் தகவல் வெளியானது. இப்போது வருகின்ற ஜூன் 2ம் வாரத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதி தொகுதியிலும் 10ம், +2 வகுப்புகள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1500 மாணவ, மாணவிகளை விஜய் சந்திக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கூடுதலாக, பெற்றோர்கள் இல்லாத நிலையிலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளையும் விஜய் சந்திக்கிறார் என கூறப்படுகிறது. ஜூன் 14ல் இதற்கான நிகழ்வு நடக்கலாம் என கூறப்படுகிறது.