புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரின் 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார் என்று அறிவித்தனர். சினிமா அல்லாமல் விரைவில் அரசியலில் இறங்குகிறார் விஜய். கடந்த சில மாதங்களாக தன் ரசிகர்களின் மூலமாக அம்பேத்கர் போன்ற முக்கிய தலைவர்களுக்கு அவர்கள் பிறந்தநாள் அன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்படி அறிவுறித்தினார்.
இந்நிலையில் அடுத்தப்படியாக மாணவர்களை சந்திக்க உள்ளார். சமீபத்தில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளை நேரில் சந்திக்கிறார் விஜய் தகவல் வெளியானது. இப்போது வருகின்ற ஜூன் 2ம் வாரத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதி தொகுதியிலும் 10ம், +2 வகுப்புகள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1500 மாணவ, மாணவிகளை விஜய் சந்திக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கூடுதலாக, பெற்றோர்கள் இல்லாத நிலையிலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளையும் விஜய் சந்திக்கிறார் என கூறப்படுகிறது. ஜூன் 14ல் இதற்கான நிகழ்வு நடக்கலாம் என கூறப்படுகிறது.