காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் |
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், 'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'தீராக் காதல்'. இப்படம் வருகிற 26ம் தேதியன்று தியேட்டர்களில் வெளியாகிறது.
இதையொட்டி நடந்த படத்தின் அறிமுக நிகழ்வில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது: எல்லா கதைக்கு பின்னாடியும் சில கதைகள் இருக்கும். அதே போல் எனக்கும் இயக்குநர் ரோகினுக்கும், இரண்டு வருடக் கதை உண்டு. நாங்கள் பல நாட்களுக்கு முன்னதாகவே படம் பண்ண வேண்டியது, எங்களின் கதையைக் கேட்டு அதை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. எனது நீண்ட நாள் நண்பர் தமிழ்குமரன் லைகா நிறுவனத்தில் தற்போது உயர் அதிகாரியாக இருக்கிறார். அவருக்கு நான்கைந்து கதைகள் அனுப்பி வைத்தேன் அதில் இந்த கதையும் ஒன்று.
இந்த படத்திற்கு நல்ல தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு நானும் இயக்குனர் ரோகின் வெங்கடேசனும் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றோம். செல்லும் வழியில் தமிழ்குமரன் போன் செய்து இந்த படத்தை நாம் தயாரிக்கலாம் என்றார்.
இந்தப்படம் மனதிற்கு இதமான ஒரு அனுபவத்தை அனைவருக்கும் அளிக்கும், ஜெய் தான் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் ஒரே முடிவாக இருந்தார், ஏன் என்று தெரியவில்லை. அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஷிவதாவின் தீவிர ரசிகை நான். படத்தில் ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருந்தது. அனைவரும் அதனை ரசிப்பீர்கள், ஒட்டு மொத்த படக்குழுவினரும் நல்ல உழைப்பைக் கொடுத்துள்ளார்கள். படத்திற்கு ஆதரவு தாருங்கள் அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.