ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சோனா தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி தொடரில் தாரா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக கலக்கி வந்தார். அவரது மிரட்டலான நடிப்பு நேயர்களிடமும் பாராட்டுகளை பெற்ற வந்தது. ஆனால், சோனா திடீரென மாரி சீரியலை விட்டு விலகிவிட்டார். இதற்கான காரணம் என்னவென்று தெரியாததால் ரசிகர்கள் குழம்பினர். இந்நிலையில், தற்போது சக நடிகையுடன் ஏற்பட்ட பிரச்னை தான் காரணம் என தெரியவந்துள்ளது.
மாரி தொடரில் சோனாவுக்கு மருமகளாக நடிக்கும் ஷப்னம் நகைச்சுவை உணர்வு கொண்டவர். எப்போதும் எல்லோரையும் ஜாலியாக கிண்டலடித்து பேசுவார். அவர் ஒரு முறை சூட்டிங்கின் போது சோனாவை பற்றி கிண்டலாக பேச இருவருக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. இதனால் கோபமான சோனா ஒருகட்டத்தில், 'மாரி சீரியல்ல அவ இருக்கணும் இல்ல நான் இருக்கணும்' என்ற ரேஞ்சில் சீரியல் குழுவினரிடம் சண்டை போட்டுவிட்டு வெளியேறியிருக்கிறார். சோனாவை சமாதானப்படுத்த முடியாத சீரியல் குழுவினர் தாரா கதாபாத்திரத்திற்கு வேறு நடிகையை தேட ஆரம்பித்துவிட்டதாக சின்னத்திரை வட்டாரத்தினர் பேசி வருகின்றனர்.