ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
100 நாட்கள் என்பதே அரிதாகிப் போன இந்தக் காலத்தில் ஒரு படம் 50 நாளைத் தொடுவதே ஒரு சாதனைதான். தியேட்டர்களில் ஓடாத சில முன்னணி நடிகர்களின் படங்களுக்கே 50வது நாள் போஸ்டர்கள் வெளியிடும் இந்தக் காலத்தில் ஒரு சில தியேட்டர்களில் ஒரு சில காட்சிகள் ஓடி 50 நாளைக் கடந்தாலும் அது சிறப்பே.
வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜாவின் இசையமைப்பில், சூரி கதாநாயகனாக நடிக்க, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ மற்றும் பலர் நடித்த இந்தப் படம் இன்று 50வது நாளைத் தொட்டிருக்கிறது.
படம் வெளியான போது விமர்சகர்களின் வரவேற்பும், ரசிகர்களின் வரவேற்பும் படத்திற்கு அதிகமாகவே இருந்தது. அதே சமயம் படத்தின் கதையைப் பற்றியும், கதாபாத்திரங்களைப் பற்றியும் சில சர்ச்சைகள் எழுந்தது.
பின் ஓடிடி தளத்தில் வெளியான பின் குறுகிய காலத்தில் அதிக நிமிடங்கள் பார்க்கப்பட்ட படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றது. ஓடிடியில் வெளிவந்த பின்பும் தியேட்டர்களில் ஓடுவதும் பெருமைதான். இந்த வருடத்திலேயே இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சில காட்சிகளை தற்போது படமாக்கி வருவதாகவும் தகவல்.