ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

100 நாட்கள் என்பதே அரிதாகிப் போன இந்தக் காலத்தில் ஒரு படம் 50 நாளைத் தொடுவதே ஒரு சாதனைதான். தியேட்டர்களில் ஓடாத சில முன்னணி நடிகர்களின் படங்களுக்கே 50வது நாள் போஸ்டர்கள் வெளியிடும் இந்தக் காலத்தில் ஒரு சில தியேட்டர்களில் ஒரு சில காட்சிகள் ஓடி 50 நாளைக் கடந்தாலும் அது சிறப்பே.
வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜாவின் இசையமைப்பில், சூரி கதாநாயகனாக நடிக்க, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ மற்றும் பலர் நடித்த இந்தப் படம் இன்று 50வது நாளைத் தொட்டிருக்கிறது.
படம் வெளியான போது விமர்சகர்களின் வரவேற்பும், ரசிகர்களின் வரவேற்பும் படத்திற்கு அதிகமாகவே இருந்தது. அதே சமயம் படத்தின் கதையைப் பற்றியும், கதாபாத்திரங்களைப் பற்றியும் சில சர்ச்சைகள் எழுந்தது.
பின் ஓடிடி தளத்தில் வெளியான பின் குறுகிய காலத்தில் அதிக நிமிடங்கள் பார்க்கப்பட்ட படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றது. ஓடிடியில் வெளிவந்த பின்பும் தியேட்டர்களில் ஓடுவதும் பெருமைதான். இந்த வருடத்திலேயே இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சில காட்சிகளை தற்போது படமாக்கி வருவதாகவும் தகவல்.