31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு |

உலகத் திரைப்பட விழாக்களில் முக்கியமான ஒரு விழா கேன்ஸ் திரைப்பட விழா. உலகம் முழுவதும் உள்ள திரைப்படங்கள், திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது.
அந்த விழாவில் இந்தியத் திரையுலக நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள். 'தேவதாஸ்' படத்திற்கான திரையிடலில் முதன் முதலில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டு வருகிறார். 21 ஆண்டுகளாக கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டுள்ள ஐஸ்வர்யா ராய் இந்தாண்டு வித்தியாசமான ஆடை ஒன்றை அணிந்து 'ரெட் கார்ப்பெட்'டில் அசத்தியுள்ளார்.
'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆடை வடிவமைப்பாளரான ஏக லகானி வடிவமைத்துள்ள அந்த ஆடை அலுமினியம் மற்றும் கிரிஸ்டல் கலந்து உருவாக்கப்பட்ட ஆடை. சோபி கோச்சர் என்ற நிறுவனத்தின் வெளியீடாக கேன்ஸ் விழாவில் அந்த சில்வர் நிற ஆடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உடலை முழுவதுமாக மறைத்திருக்கும் அந்த ஆடையில் ஐஸ்வர்யா ராயின் முகத் தோற்றமும், அவரது கண்களும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கமெண்ட்டுகளாக நிறைந்துள்ளது.