ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

லியோ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 68வது படத்தை இயக்குபவர்கள் பட்டியலில் அட்லீ, கார்த்திக் சுப்பராஜ், கோபிசந்த் மாலினேனி ஆகிய இயக்குனர்களின் பெயர்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அது அனைத்தும் வதந்திகள், விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு தான் இயக்குகிறார் என்பது போன்று இன்னொரு செய்தி பரபரப்பாக வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கும் படங்கள் என்றாலே யுவன் சங்கர் ராஜா தானே இசையமைப்பார் என்பதால் விஜய் 68- வது படத்துக்கு அவரே இசையமைப்பார் என்ற செய்திகளும் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பில்லை.
வாரிசு படத்திற்கு பிறகு விஜய் தெலுங்கு ரசிகர்களுக்கும் பரீட்சயமான நடிகராகி விட்டதால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் ஒருவரைதான் இந்த படத்திற்கு இசையமைக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது லியோ படத்துக்கு இசையமைத்து வரும் அனிருத்தே, விஜய் 68வது படத்திற்கும் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் விஜய்யை வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் கூட யுவன் சங்கர் ராஜாவினால் இடம்பெற முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்படி என்னதான் பரபரப்பான செய்திகள் வெளியானபோதும், விஜய்யை வெங்கட் பிரபு இயக்குவதாக வெளியாகி உள்ள செய்திகள் கூட அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்போதுதான் அது உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.