ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

நடிகர் கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் கடந்த வருடமே அறிவிப்பு வெளியானது. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் 55 நாட்கள் கொண்ட மிக நீண்ட படப்பிடிப்பிற்காக ஏற்கனவே திட்டமிட்டபடி காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்துவதற்காக சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் சென்றுள்ளனர்.
ஆனால் வரும் செப்டம்பர் மாதம் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு நாடெங்கிலும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு ஊர்களில் கலை விழாக்கள் நடைபெற இருக்கின்றன. அதனால் இதற்கான பாதுகாப்பு பணிகள் உள்ளிட்ட சிலவற்றை காரணம் காட்டி காஷ்மீரில் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பை நடத்த பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர், இதனை தொடர்ந்து வேறு வழியின்றி படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பி உள்ளனர்.




