சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் ராஷ்மிகா கடந்த வருடம் பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்தார். அமிதாப்பச்சனுடன் அவர் நடித்த குட்பை மற்றும் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்த மிஷன் மஞ்சு என இரண்டு படங்கள் வெளியானாலும் அவை மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை. தற்போது ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல் என்கிற படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இந்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹிந்தியில் ஒரு பெரிய படத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
ஹிந்தியில் பிரபல தயாரிப்பாளரான ஏக்தா கபூர் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளனர். இந்த படத்தில் தான் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஹிந்தியில் ஏக்தா கபூர் தயாரித்த குட்பை மற்றும் தெலுங்கில் தில் ராஜு தயாரித்த வாராசுடு ஆகிய படங்களில் ராஷ்மிகா நடித்திருப்பதால் இந்த இருவருமே தங்களது படத்திற்கு ராஷ்மிகா பொருத்தமான நபர் என முடிவு செய்து விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.