பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வந்த ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு பேட்ச் ஒர்க் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருக்கிறது. இப்படம் ஆகஸ்ட் பத்தாம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மும்பையில் நடைபெறும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் ரஜினி.
அதையடுத்து அவர் சென்னை திரும்பியதும் ஜெயிலர் படத்தில் தனக்கான டப்பிங் பணிகளை தொடங்குகிறார். அந்த வகையில் ஜூன் 1ம் தேதி முதல் ஜெயிலர் படத்தின் டப்பிங்கை அவர் தொடங்குவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த பணிகளை முடித்ததும் அடுத்தபடியாக ஜெய்பீம் ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கிறார்.