தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு |
கடந்த சில நாட்களாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக தகவல் பரவியது. இதற்கு காரணம் லியோ படத்திற்கு திரைக்கதை எழுதி வரும் வரும் ரத்னகுமார் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி அணிந்திருந்த கண்ணாடியை பகிர்ந்திருந்தார். இதை வைத்து இந்த தகவல்கள் பரவியது. இதனை தற்போது விஜய்சேதுபதி மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: லியோ படத்தில் நான் நடிக்கவில்லை. தயவு செய்து இதுகுறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம். ரத்னகுமார் எதற்காக அந்த கண்ணாடி படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்தார் என்று எனக்குத் தெரியாது. லியோ படத்தில் நான் நடிப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். ஒவ்வொருத்தருககும் என்னால் தனித்தனியாக பதில் சொல்ல முடியாது. அதனால் இந்த விளக்கத்தை அளிக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.