புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
கிடாரி படம் மூலம் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை நிகிலா விமல். அதன்பிறகு தமிழில் சசிகுமாரின் வெற்றிவேல், கார்த்தியின் தம்பி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார். தமிழில் அடுத்ததாக அவரது நடிப்பில் வாழி என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் மலையாளத்தில் அவர் நடித்த அயல்வாசி என்கிற திரைப்படம் வெளியானது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகிலா விமல் அளித்த ஒரு பேட்டியின் போது, கேரள மலபார் இஸ்லாமிய திருமணங்கள் குறித்து அவர் கூறுகையில், கண்ணூரில் நடக்கும் அது போன்ற திருமண நிகழ்வுகளில் அங்குள்ள பெண்கள், வீடுகளின் சமையலறை பக்கம் தான் உணவு பரிமாறுவார்கள் என்பது போன்று அவர் கூறியதாக செய்திகள் வெளியானது. அவரது இந்த பேச்சுக்கு பல பக்கம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
இது குறித்து நிகிலா விமல் கூறும்போது, “தற்போது வெளியாகி உள்ள செய்திகளில் கூறப்படுவது போல, எதையும் நான் சர்ச்சையாக கூறவில்லை. சொல்லப்போனால் எனது பேட்டியில் நான் கூறிய ஒரு கருத்தை திரித்து தவறாக வெளியிட்டுள்ளார்கள். அதனால் இது தொடர்பாக நான் யாருக்கும் விளக்கம் எதுவும் சொல்லப் போவதில்லை” என்று கூறியுள்ளார்.