சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கி உள்ள பிசாசு 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. அதன் பிறகு மாளிகை, கா உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். திரையுலகில் நடிகை, பாடகி என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஆண்ட்ரியா, இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.
தற்போது அவர் பூடான் நாட்டுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஆண்ட்ரியா, ஒரு பதிவும் போட்டிருக்கிறார். அந்த பதிவில், பூடான் நாட்டில் அனுபவிக்க மூன்று விஷயங்களை உள்ளன. இமயமலையின் ராஜ்ஜியத்தையும் அதன் நிலப்பரப்புகளையும் கண்டுகளிக்கலாம். இங்கு நடை பயணத்தின் மூலம் சுத்தமான காற்றை அனுபவிக்க முடியும். பௌத்த பூமியான இந்த பூடானில் ஆன்மிகத்தை உணர முடிகிறது. இப்படி ஒரு மறக்க முடியாத பயணம் கிடைத்தமைக்கு நன்றி என அவர் பதிவிட்டுள்ளார்.