சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கி உள்ள பிசாசு 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. அதன் பிறகு மாளிகை, கா உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். திரையுலகில் நடிகை, பாடகி என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஆண்ட்ரியா, இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.
தற்போது அவர் பூடான் நாட்டுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஆண்ட்ரியா, ஒரு பதிவும் போட்டிருக்கிறார். அந்த பதிவில், பூடான் நாட்டில் அனுபவிக்க மூன்று விஷயங்களை உள்ளன. இமயமலையின் ராஜ்ஜியத்தையும் அதன் நிலப்பரப்புகளையும் கண்டுகளிக்கலாம். இங்கு நடை பயணத்தின் மூலம் சுத்தமான காற்றை அனுபவிக்க முடியும். பௌத்த பூமியான இந்த பூடானில் ஆன்மிகத்தை உணர முடிகிறது. இப்படி ஒரு மறக்க முடியாத பயணம் கிடைத்தமைக்கு நன்றி என அவர் பதிவிட்டுள்ளார்.