Advertisement

சிறப்புச்செய்திகள்

இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படம் படுதோல்வி, மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்

02 மே, 2023 - 03:35 IST
எழுத்தின் அளவு:
Agent-failure-:-Producer-says-apology

தெலுங்குத் திரையுலகின் வாரிசு நடிகர்களில் ஒருவர் அகில். நட்சத்திரத் தம்பதிகளான நாகார்ஜுனா, அமலா ஆகியோரின் மகன். தெலுங்கில் 2015ல் வெளிவந்த 'அகில்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்குப் பின் நான்கைந்து படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் இன்னும் முன்னணி கதாநாயகர்களின் வரிசையில் இடம் பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.

அவர் நாயகனாக நடித்த 'ஏஜன்ட்' என்ற தெலுங்குப் படம் கடந்த வாரம் வெளிவந்தது. படத்திற்கு மோசமான வரவேற்பும், வசூலும் கிடைத்து முதல் நாளிலேயே படத்தைப் படுதோல்வி படம் என்று சொல்லிவிட்டார்கள்.

படத்தின் தயாரிப்பாளரான அனில் சுங்கரா படம் வெளியான இரண்டு நாளிலேயே படத்தின் தோல்விக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். நேற்று டுவிட்டரில், “ஏஜன்ட்டின் முழு பழியையும் நானே ஏற்க வேண்டும். இது மேல்நோக்கிய பணி என்று எங்களுக்குத் தெரிந்திருந்தும் நாங்கள் வெற்றி பெற நினைத்தோம். ஆனால், அதை செய்யத் தவறிவிட்டோம்.

படத்திற்காக முழுமையான ஸ்கிரிப்ட் இல்லாமல், படத் தொடங்குவதில் சில பிரச்சினைகளையும் வைத்துக் கொண்டு கோவிட்டையும் எதிர் கொண்டோம். எந்தவிதமான சாக்குபோக்கையும் சொல்ல விரும்பவில்லை. இந்த விலையுயர்ந்த தவறிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளோம். இதுபோன்ற தவறுகளை மீண்டும் செய்ய மாட்டோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவரிடமும் மனப்பூர்வமான மன்னிப்பைக் கேட்கிறோம். எங்களது எதிர்கால திட்டங்களில் அர்ப்பணிப்புடன் திட்டமிடல் மற்றும் கடின உழைப்புடன் இழப்புகளை ஈடு செய்வோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

படம் வெளியான சில தினங்களிலேயே இப்படி தோல்விக்காக ஒரு தயாரிப்பாளர் காரணத்தையும், மன்னிப்பையும் கேட்டிருப்பது தெலுங்கு திரையுலகத்தினரிடம் மட்டுமல்லாது மற்ற மொழித் திரையுலகத்தினரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிந்து சமவெளி நாகரிகத்தை  படமாக்க வேண்டும் : ராஜமவுலிக்கு தொழிலதிபர் கோரிக்கைசிந்து சமவெளி நாகரிகத்தை படமாக்க ... சண்டைக் காட்சியில் டூப்  போடாமல் அந்தரத்தில் பறந்த லட்சுமி மஞ்சு சண்டைக் காட்சியில் டூப் போடாமல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in