அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
திருவனந்தபுரம்: புட்பால் விளையாட்டை காண சென்ற பிரபல நடிகர் மம்முகோயா(76) செல்பி எடுக்கும் நேரத்தில் மைதானத்தில் சரிந்து விழுந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று(ஏப்., 26) மாரடைப்பால் அவர் காலமானார்.
பிரபல மலையாள நடிகரான மம்முகோயா நாடக கலைஞராக தனது வாழ்க்கையை துவக்கினார். தொடர்ந்து காமெடி நடிகராக சுமார் 450 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். இரண்டுமுறை மாநில அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் அவர் பிளமென்ஸ் ஆப் பாரடைஸ் என்ற பிரெஞ்சுமொழி படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.
76 வயதான மம்முகோயா மலப்புரம் மாவட்டத்தில் கால்பந்து போட்டியை துவக்கி வைப்பதற்காக நேற்று சென்றார். வந்த இடத்தில் ரசிகர்கள் கூட்டம் செல்பி எடுப்பதாக அவரை சூழ்ந்தனர். அப்போது தனக்கு உடல்நிலை சவுகரியம் இருப்பதாக கூறினார். தொடர்ந்து அவர் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐ.சி.யூ வார்டில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று(ஏப்., 26) அவரது உயிர் பிரிந்தது.
மம்முகோயாவின் மறைவு மலையாள திரையுலகினர் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.