அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
கடந்த சில நாட்களாக இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு குற்றாலம் பகுதியில் நடைபெற்று வருகிறது. அப்போது படத்தின் படப்பிடிப்பில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்கும் வகையில் வெடிகுண்டு காட்சிகள் புலிகள் சரணாலயத்தில் பாம் பிளாஸ்ட் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதாக நேற்று மத்தளம் பாறையில் பகுதியில் நடைபெற்ற கேப்டன் மில்லர் படப்பிடிப்பை தென்காசி கலெக்டர் நிறுத்தியுள்ளார் .
இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு அதே மத்தளம் பாறை பகுதியில் துவக்கியுள்ளது. அனைத்து பிரச்சினைகளையும் முடித்த பிறகு தான் இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.