விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி என பல படங்களை இயக்கியவர் ராம். இவர் தற்போது ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கி வருகிறார். மலையாள நடிகர் நிவின்பாலி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அஞ்சலி, சூரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது இப்படம் குறித்து ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளார் நடிகர் சூரி. அதில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் தான் டப்பிங் பேசிய வீடியோக்களை வெளியிட்டு இப்படத்தின் டப்பிங் பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார். அதனால் ராம் இயக்கி உள்ள இந்த ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்பது தெரிய வந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்தை மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார்.