பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மாநாடு, பத்துதல, வெந்து தணிந்தது காடு என தொடர் வெற்றிகளால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சிம்பு. வெந்து தணிந்தது காடு படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஒரு பல்கலை கழகத்தில் நடந்தபோதும், பத்துதல பாடல் வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடந்தபோதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினார். இது சிம்புவிற்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக தனது ரசிகர்மன்ற மாவட்ட நிர்வாகிகளை தனது வீட்டுக்கு அழைத்து அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுக்கு பிரியாணி விருந்தளித்த சிம்பு தன் கையாலேயே ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறினார். இதனால் ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
ரசிகர் மன்ற நிர்வாகிகளிடையே பேசிய சிம்பு “மன்றத்தின் பணிகளை விரிவுபடுத்துங்கள், மக்களுக்கு நிறைய சமூக சேவைகள் செய்து அவர்களின் நன்மதிப்பை பெறுங்கள். அப்போதுதான் நமது எதிர்கால திட்டமிடலுக்கு அது சாதகமாக இருக்கும். பட வெளியீட்டின்போது எந்த பணி செய்தாலும் பாதுகாப்பை முக்கியமாக கருதுங்கள்” என்றார்.