கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
கடந்த வருடம் வெளியான முதல் பாகத்தில் படத்தின் ஆரம்பத்தில் சோழர்களைப் பற்றிய அறிமுகத்திற்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணிக் குரல் கொடுத்திருந்தார். இரண்டாம் பாகத்திலும் அவரது பின்னணிக் குரலுடன்தான் படம் ஆரம்பமாக உள்ளது. இது பற்றிய தகவலை நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மணிரத்னம் தெரிவித்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் தான் அடுத்து நடிக்க உள்ளார். 'இந்தியன் 2' படப்பிடிப்பு முடிந்த பிறகு அப்படம் ஆரம்பமாக உள்ளது. 'நாயகன்' படத்திற்குப் பின் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
ரஜினியை இயக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் அதுவும் மகிழ்ச்சிதான் என்றும் மணிரத்னம் நேற்று கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் கூறியிருந்தார்.