மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் மனோகரன் மற்றும் கண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படம் 'சைத்ரா'. இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஜெனித்குமார் இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: 24 மணி நேரத்தில் நடக்கும் கதை இது. இதில் யாஷிகா ஆனந்த் பேயாக நடித்துள்ளார். அவர் சோலோ ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இது. பேய் படம் என்றாலும் வழக்கமான காட்சிகள் இன்றி புதுமையான முறையில் இதனை படமாக்கி உள்ளதோடு. ஒரு முக்கியமான விஷயம் பற்றியும் படம் பேசுகிறது. பேய் இருக்கிறதா? இல்லையா என்ற விவாவத்தையும் முன் வைக்கிறது. என்றார்.