இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி |
சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. அதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அவர் தற்போது தனது ஐம்பதாவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை குரங்கு பொம்மை என்ற படத்தை இயக்கிய நிதிலன் இயக்கி வருகிறார். பழிவாங்கும் கதையில் உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு 50 நாட்கள் நடந்து முடிந்து விட்டதாகவும், விஜய் சேதுபதி இன்னும் 10 நாட்கள் மட்டுமே நடிக்க வேண்டிய உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் என்பதால் இதுவரை அவர் நடித்த படங்களில் இருந்து கதை மற்றும் கதாபாத்திரம் இரண்டுமே வித்தியாசமாக இருக்கும் என்று இயக்குனர் நிதிலன் தெரிவித்திருக்கிறார்.