ஸ்பெயினிலும் சாதித்த அஜித் அணி: 3ம் இடம் பிடித்து அசத்தல் | அக்டோபர் 5ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன்- 9 ஆரம்பம்! | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகிறது! | என் சாம்பியனுக்கு அருகில் இருக்கிறேன்! - புகைப்படங்களுடன் ஷாலினி வெளியிட்ட பதிவு | பிளாஷ்பேக்: 'ஜுபிடர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க ஆசைப்பட்டு, முடியாமல் போன திரைப்படம் | 'ஓஜி' வரவேற்பு: பிரியங்கா மோகன் தெரிவித்த நன்றி | ‛தி பாரடைஸ்' படத்திலிருந்து மோகன் பாபு பர்ஸ்ட் லுக் வெளியானது! | தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ‛நோ' சொன்ன ருக்மணி வசந்த்.. ‛எஸ்' சொன்ன கீர்த்தி சுரேஷ்! | இளவட்ட இயக்குனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகை |
சமந்தா நடிப்பில் குணசேகர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் சாகுந்தலம். புராண காவியமான சாகுந்தலத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமந்தா. படத்தில் முக்கால்வாசி காட்சிகளில் இவர் சாதாரண வெள்ளை உடை அணிந்து காட்டில் உள்ள ஆசிரமத்தில் வாழும் பெண்ணாக நடித்திருந்தார். ஆனால் கிளைமாக்ஸில் இவர் மன்னனின் அரண்மனைக்கு செல்லும் காட்சியில் கிட்டத்தட்ட 30 கிலோ எடைகொண்ட லெகங்கா போன்ற உடை அணிந்து நடித்திருந்தார். அதை அணிந்துகொண்டு நடித்தபோது அதன் எடையால் தான் சற்றே சிரமப்பட்டதாகவும், எப்போது அந்த காட்சியை படமாக்கி முடிப்பார்கள் என நினைத்ததாகவும் கூட கூறியிருந்தார் சமந்தா.
அதேபோல அந்தப்படத்தில் அசுரர் குல தலைவனாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பாலிவு நடிகர் கபீர் துஹான் சிங். தமிழில் அஜித்தின் துணிவு, விஷாலின் ஆக்சன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக இவர் நடித்திருந்தார். இந்த சாகுந்தலம் படத்திற்காக சுமார் 15 கிலோ எடை கொண்ட ஆபரணங்களால் ஆன உடைகளை அணிந்து கொண்டு நடித்ததாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் கபீர் துஹான் சிங்.