‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜு தமிழ் படங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஒரு பக்கம் தெலுங்கில் மிகப்பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்துக் கொண்டே இந்த வருடம் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தையும் தயாரித்தார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இந்த படம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பையும் வசூலையும் கொடுக்கவில்லை. இருந்தாலும் விட்ட இடத்திலேயே பிடிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் அடுத்ததாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஒன்றை அவர் தயாரிக்க இருப்பதாக தற்போது தெலுங்கு திரையுலகில் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற வால்டர் வீரய்யா படத்தை இயக்கிய இயக்குனர் பாபி தான் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்தின் சில நாட்கள் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொள்ள இருக்கிறார். அதை தொடர்ந்து ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.
தெலுங்கு திரையரங்கில் இருந்து வெளியான தகவல்களின்படி ஞானவேல் படத்திலும் தில் ராஜு தயாரிக்கும் படத்திலும் ஒரே சமயத்தில் மாறிமாறி அவர் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..