காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் |
குணசேகரன் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் சாகுந்தலம். அவருக்கு ஜோடியாக தேவ் மோகன் நடித்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இதனால் தற்போது இந்தியா முழுக்க சென்று சாகுந்தலம் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சமந்தா. இந்த நிலையில் இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்ற போது சமந்தாவை போட்டோ எடுப்பதற்கு போட்டோகிராபர்கள் சூழ்ந்துள்ளார்கள். அதோடு அந்த போட்டோகிராபர்கள் பிளாஷ் போட்டு எடுத்ததால் டென்ஷனான சமந்தா தனது கண்களை மூடிக்கொண்டு அங்கிருந்து வெளியேறி இருக்கிறார். இதனால் இந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.