பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
வழுத்தூர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில்..நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் குலதெய்வ வழிபாடு செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேலவழுத்தூரில் அமைந்துள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களின் குலதெய்வ கோயிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.
இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலித்த நடிகை நயன்தாரா வாடகை தாயின் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்த இரண்டு ஆண் குழந்தைகளுக்கு ஒரு குழந்தைக்கு உயிர்ருத்ரோநீல் என்.சிவன் என்றும், மற்றொரு குழந்தைக்கு உலக தெய்விக் என்.சிவன் என்றும் பெயர் சூட்டியுள்ளனர். இந்த நிலையில் தனது குலதெய்வ கோயிலான வழுத்தூர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவரும் பொங்கல் வைத்து, சாமிக்கு சிறப்பு ஆராதனை செய்து வழிபட்டனர்.
நயன்தாரா கோவிலுக்கு வந்த உடனே இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், ரசிகர்களும் குவிந்து விட்டனர். அய்யம்பேட்டை போலீஸ் ஆய்வாளர் (பொறுப்பு) கலைவாணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.