ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வித்தியாசமான கதைகளங்களில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் 1 படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. படத்தின் ரிலீஸ்க்கு முன்பே ரூ.70 கோடி வரை அவரது படத்திற்கு இப்போது பிஸினஸ் நடைபெறுகிறதாம். இதைதொடர்ந்து தனது சம்பளத்தையும் உயர்த்தி உள்ளாராம் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திலே ரூ.25 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார். இனிவரும் படங்களிலும் இன்னும் சம்பளம் உயரும் என கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து அவர் நடிப்பில் இறைவன், சைரன் திரைப்படம் இந்த வருடமே வெளியாக உள்ளது. தற்போது இயக்குனர் எம்.ராஜேஷ் படத்திலும் நடித்து வருகிறார். ஜெயம் ரவி விரைவில் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் ரூ.100 கோடி பொருட்செலவில் உருவாக இருக்கிறது. இதையடுத்து அவர் அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.