டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

நெல்சன் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், தமன்னா, யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ரப் அண்ட் டப்பான ஜெயிலர் வேடத்தில் நடித்து வரும் ரஜினி, சண்டை காட்சிகளில் பெரிய அளவில் அதிரடி காட்டி இருப்பதாக அப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார்.
அவர் கூறுகையில், ஜெயிலர் படத்தின் அனைத்து சண்டைக் காட்சிகளுமே சிறப்பாக வந்துள்ளது. அதிலும் இந்த படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி மிகப் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஜினிகாந்த் இந்த ஜெயிலர் கதாபாத்திரத்திற்கு ஏற்ப மிகவும் ஆக்டிவாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒவ்வொரு சண்டை காட்சிகளிலும் அவர் காட்டிய ஈடுபாடு வியப்பாக இருந்தது. அதனால் ஜெயிலர் படத்தின் சண்டை காட்சிகள் ரஜினி ரசிகர்களை பெரிய அளவில் கவரக்கூடியதாக இருக்கும் என்று ஸ்டண்ட் சில்வா தெரிவித்திருக்கிறார்.