சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், தமன்னா, யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ரப் அண்ட் டப்பான ஜெயிலர் வேடத்தில் நடித்து வரும் ரஜினி, சண்டை காட்சிகளில் பெரிய அளவில் அதிரடி காட்டி இருப்பதாக அப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார்.
அவர் கூறுகையில், ஜெயிலர் படத்தின் அனைத்து சண்டைக் காட்சிகளுமே சிறப்பாக வந்துள்ளது. அதிலும் இந்த படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி மிகப் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஜினிகாந்த் இந்த ஜெயிலர் கதாபாத்திரத்திற்கு ஏற்ப மிகவும் ஆக்டிவாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒவ்வொரு சண்டை காட்சிகளிலும் அவர் காட்டிய ஈடுபாடு வியப்பாக இருந்தது. அதனால் ஜெயிலர் படத்தின் சண்டை காட்சிகள் ரஜினி ரசிகர்களை பெரிய அளவில் கவரக்கூடியதாக இருக்கும் என்று ஸ்டண்ட் சில்வா தெரிவித்திருக்கிறார்.