மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
பாலிவுட் வில்லன் நடிகர் ராகுல் தேவ். தமிழில் நரசிம்மா, முனி, ஆதவன், வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தி லெஜண்ட் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். சமீபத்தில் தனது நேர்காணல் ஒன்றில் தென்னிந்திய படங்கள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: நிஜ வாழ்க்கைக்கு சிறிதும் தொடர்பில்லாத வகையில் தென்னிந்திய படங்கள் உருவாகின்றன. அதில் வரும் ஆக்ஷன் காட்சிகள் லாஜிக் மீறல்களாக இருக்கின்றன. குறிப்பாக, 1980களில் வந்த பாணியை பின்பற்றித்தான் இப்போதைய தென்னிந்திய படங்களை எடுக்கிறார்கள். ஆனால் ஹீரோயிச மாயை வைத்தும், பொழுதுபோக்கு அம்சங்களை நிரப்பியும் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள். நானே கூட இதுபோன்ற படங்களில் நடித்திருக்கிறேன்.
அப்போது எனது மூளையை கழற்றி வீட்டில் வைத்துவிட்டுதான் படப்பிடிப்புக்கு செல்வேன். ஜிம் பாடியான என்னை, வலுவிழந்த ஹீரோ அடித்து உதைப்பதை நான் சகித்துக்கொண்டுதான் ஆக வேண்டும். தியேட்டரில் அதற்கு கைதட்டல் விழுந்தால்கூட நான் அமைதியாகத்தான் இருக்க வேண்டும். இதில் எது சரி, எது தவறு என சொல்ல வரவில்லை.
அதேசமயம், கற்பனைக்கு றெக்கை கட்டும்போது அதை சாமானிய ரசிகன் ரசித்து பார்க்கிறான். இரண்டு பேர் நிஜத்தில் சண்டையிட்டால், அவர்கள் தங்களது ஜிம் பாடியை காட்ட மாட்டார்கள். ஆனால் சினிமாவில் சட்டையை கிழித்து சிக்ஸ்பேக்கை காட்ட வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.